கல்விச்சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களை முன்னெடுப்பதற்கு பதில் நவீன கல்விமுறைக்கான யோசனைகளை முன்வைக்கவேண்டும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நூறுவீதம் அரசபல்கலைகழகங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு செயற்படமுடியாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி அதேவேளை தனியார் பல்கலைகழகங்களை வர்த்தகமாக முன்னெடுப்பதை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
தனியார் பல்கலைகழகங்கள் மூலம் கிடைக்கும்வருமானத்தை கல்வி அபிவிருத்திக்கு ஒதுக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பல பல்கலைகழக பட்டதாரிகள் அரசாங்க தொழில்வாய்ப்பினை எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்துள்ள ஜனாதிபதி வேலைவாய்ப்பை வழங்குவது மாத்திரம் அரசாங்கத்தின் பணியில்லை வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான முழுமையான பொருளாதார சூழ்நிலையை உருவாக்குவதும் அரசாங்கத்தின் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.