13 ஐ எதிர்த்துக்கொண்டு ஏன் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.? – முன்னணியிடம் அடைக்கலநாதன் கேள்வி !

இந்தியாவின் தலையீட்டால் தான் தமிழை பிரதான மொழியாக ஏற்றுக் கொண்டனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவு படுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஏனைய நாடுகள் வர்த்தக உடன்படுக்கையை மட்டுமே எமது நாட்டுடன் செய்கிறார்கள். இந்தியா மட்டும் தான் அன்று தொடக்கம் எம்முடன் இன பிரச்சினை,தொடர்பில் கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றனர்.

அவர்களின் தலையீட்டை அடுத்து தான் தமிழ் மொழியும் பிரதான மொழியாக ஏற்றுக்கொண்டனர்.

நாம் 6 கட்சிகள் முட்டாள்கள்,கஜேந்திக்குமார் அணி அறிவாளிகள் அப்படியா?.அப்படியென்றால் ஏன் மாகாண சபைகளின் அதிகாரங்களை கேள்வி குறியாக்கும் திருத்தங்களை நீங்கள் எதிர்த்துக்கொண்டு ,மாகாண சபை தேர்தலில் போட்டியிட போகின்றீர்கள் என்று சொல்கிறீர்கள்.

இந்தியாவின் உரித்து எங்கள் சார்பில் அரசிடம் அவர்கள் பேச வேண்டும் என்றார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *