கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரண்ணாகொடவை விட முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கே அதிக பாதுகாப்பும் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்று தெரிவித்தது.
அட்மிரல் வசந்த கரண்ணாகொட தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளராகவும் அரசாங்கத்தின் உயர் பதவியை தொடர்ந்தும் பதவி வகித்து வருகின்றபோதிலும் ஜெனரல் பொன்சேகாவுக்கே பாதுகாப்பு அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே தெரிவித்தார்.
ஜெனரல் பொன்சேகாவைவிட அட்மிரல் வசந்த கரண்ணாகொடைக்கு பாதுகாப்பும், வாகனங்களும் அதிகமாக வழங்கப்பட்டுள் ளதாக சில ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு புரம்பானது என்று அவர் மேலும் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் லக்ஷ்மன் ஹுலுகல்ல மேலும் தகவல் தருகையில், ஜெனரல் பொன்சேகாவுக்கும் அட்மிரல் கரண்ணாகொடைக்கும் ஒரே ஒரு வித்தியாசமே உள்ளது. ஜெனரல் பொன்சேகா ஓய்வுபெற்ற இராணுவ உயர் அதிகாரி. அட்மிரல் கரண்ணாகொட தொடர்ந்தும் அரசின் இரு உயர் பதவிகளை வகித்து வருபவர். எனினும் பொன்சேகாவுக்கே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
குண்டு துழைக்காத கார்-01, மோட்டார் சைக்கிள்- 04, டிபென்டர் ஜீப் வண்டிகள்- 04, வான்- 01, கடற்படை அதிகாரிகள் – 02, மற்றும் கடற்படை வீரர்கள் 40 பேர் என்ற அடிப்படையிலேயே கரண்ணா கொடைக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.